இன்று காலை 8.30 மணியளவில் வெலிங்டனில் பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியே வாகனம் ஒன்றிற்குள் சந்தேகத்திற்கிடமான துப்பாக்கி இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடாளுமன்ற வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்நிலையில் வாகனத்தில் இருந்த ஒரு நபர் தடுத்து வைக்கப்பட்டு, வாகனத்தை சோதனையிட்டபோது துப்பாக்கி கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்ந்து யாருக்கும் ஆபத்து ஏதும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.