தெஹியத்தகண்டி, சந்துன்புர பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் 6 பேர் காயம் அடைந்துள்ளதுடன், நால்வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலன்னறுவை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் பிரியந்த திஸாநாயக்க இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அவர் பயணித்த வேன் மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.