கொழும்பின் பல பகுதிகளில் நாளை இரவு 10 மணி முதல் 14 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10 ஆகிய பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (23) நண்பகல் வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

பெரிய கொழும்பு நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ மேம்பாட்டு முதலீட்டுத் திட்டத்தின் ஒரு அங்கமான புனரமைப்புத் திட்டப் பகுதியே நீர் வெட்டுக்குக் காரணம் என சபை தெரிவித்துள்ளது.