நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் 9ம் திகதி திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பின் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வந்த போட்டோக்களை அதிகம் வெளியிட்டு வந்தனர்.

திருமணமாகி 4 மாதங்களே நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக குறிப்பிட்டு போட்டோவுடன் விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் திருமணமாகி 4 மாதங்களில் எப்படி குழந்தை என திகைப்பில் ஆழ்ந்துள்ளனர் ரசிகர்கள்.

இதனிடையே அவர்கள் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றிருக்கலாம் என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.