அம்பாரை- சம்மாந்துறை நெடுஞ்சாலையில் இன்று (30) காலை பயணித்துக் கொண்டிருந்த அரச பேரூந்து பாதையை விட்டும் விலகி வயலுக்குள் பாய்ந்துள்ளது.

இவ்விபத்தானது சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மல்வத்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்துக்கு காரணம் பாரிய வளைவான பாதையூடாக பேரூந்து அதி வேகமாக சென்றமையே காரணம் என கூறப்படுகிறது.