கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் ஒழுங்கு விதிகள் தொடர்பான அறிவித்தலே வெளியாகியுள்ளது.

நிதி பொருளாதார, ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.