நீண்டகால சிறுநீரக நோயாளர்களை பரிசோதிப்பதற்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விஞ்ஞான நிலையத்துடன் கூடிய எட்டு பஸ்களை இலங்கைக்கு வழங்க சீனா ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நன்கொடையின் பெறுமதி 660 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளது. இலங்கையில் சிறுநீரக நோய் அதிகரித்துள்ள எட்டு மாவட்டங்களுக்கு இந்தப் பேருந்துகள் வழங்கப்பட உள்ளன.

அதன்படி, அனுராதபுரம், பொலன்னறுவை, வவுனியா, திருக்குணமலை, அம்பாறை, குருநாகல், மாத்தளை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த பஸ்கள் வழங்கப்படவுள்ளன.