தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம், அக்டோபர் 1 ஆம் திகதி 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு அதனுடன் இணைந்த விலங்கியல் பூங்காவிற்கு இலவச நுழைவை வழங்குகிறது.

இது அக்டோபர் 1 ஆம் திகதி கொண்டாப்படும் உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தைக் கருத்திற்க் கொண்டு. இதனை நடைமுறைப்படுத்துகிறது.

இதன்படி, தெஹிவளை மிருகக்காட்சிசாலை, பின்னவல மிருகக்காட்சிசாலை, பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் ரிதியகம சபாரி பூங்கா ஆகியவற்றிற்கு சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இலவசமாக பிரவேசிக்க முடியும். இந்நாளில் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பல நிகழ்ச்சிகளும் இந்த வளாகங்களில் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.