அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய பாராளுமன்ற குழுவான கோப் குழுவில், இன்றைய தினம் முன் னிலையாகுமாறு, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின், 2017 மற்றும் 2018ஆம் நிதியாண்டுகளுக்கு அமைவான கணக்காய்வாளர் நாய கத்தின் அறிக்கை மற்றும் அதன் செயல்திறன் என்பன தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாக அந்தக் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத் தெரி வித்துள்ளார்.