இத்தாலியில் அதிகரித்து வரும் தொற்று காரணமாக, அங்கு கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

 

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இத்தாலி 8-வது இடத்தில் உள்ளது.

 

இந்நிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியில் ஒரே நாளில் 22,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14.31 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

 

அந்நாட்டில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 630 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இத்தாலியில் வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்து 453 ஆக அதிகரித்துள்ளது.