ஆக்லாந்தின் Papakura வில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளார்.

மதியம் 1 மணிக்கு முன்னதாக இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து Great South வீதிக்கு போலீசார் அழைக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் காயமடைந்த நபர் ஆம்புலன்ஸ் மூலம் மிடில்மோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும் குறித்த பகுதியை பொலிஸார் சுற்றிவளைத்துள்ள நிலையில், வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்' என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஆக்லாந்தில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.