கடந்த வாரம் Ōtaraவில் குழந்தை இறந்தது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
மே 23 ஆம் திகதி Ōtaraவில் உள்ள Watford மருத்துவ மையத்தில் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்ததை அடுத்து கொலை விசாரணை தொடங்கப்பட்டது.

இந்நிலையில் 24 வயதுடைய நபர் ஒரு குழந்தையைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு இன்று Manukau மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக கவுண்டிஸ் மானுகாவ் டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் வாரிக் அட்கின் தெரிவித்தார்.

விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில் மேலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என அவர் தெரிவித்தார்.