காற்றின் வேகம் அதிகரித்தால் ஆக்லாந்தின் துறைமுகப் பாலத்தின் பாதைகள் மூடப்படலாம் என்று Waka Kotahi தெரிவித்துள்ளது.

இன்று காலை North Island இன் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு MetService கனமழை மற்றும் இடியுடன் கூடிய எச்சரிக்கை விடுத்தது.

நார்த்லேண்ட், ஆக்லாந்து,  Coromandel Peninsula மற்றும் வடக்கு வைகாடோ ஆகிய இடங்களில் மழையின் தீவிரம் மணிக்கு 25 முதல் 40 மிமீ வரை இருக்கலாம் என்று அது தெரிவித்தது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்லாந்து துறைமுகப் பாலத்தை மூடுவதற்கு Waka Kotahi பராமரிப்பு பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

இதனிடையே குறித்த கனமழை எச்சரிக்கைகள் மற்றும் வானிலை கண்காணிப்பு திங்கட்கிழமை காலை வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.