இன்று காலை 10 மணியளவில் மத்திய ஹாமில்டன் புறநகர்ப் பகுதியான ஃப்ராங்க்டனில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சாலைகள் மூடப்பட்டன.

கொமர்ஸ் தெருவைச் சுற்றி 100 மீ சுற்றளவில் சுற்றிவளைப்பு அமைக்கப்பட்டது.

மேலும் மக்கள் அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இந்நிலையில் இன்று நண்பகல் வேளையில், பாதுகாப்புப் படையின் உதவியுடன் பொலிஸாரால் பொதியை பாதுகாப்பாக அகற்ற முடிந்தது என்று பொலிஸ் தகவல் தொடர்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் குறித்த பகுதியில் தொடர்ந்து பொதியைப் பற்றி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.