ஆக்லாந்து புறநகர்ப் பகுதியான Mt Albert இல் ஆணின் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 22 வயதுடைய நபர் இன்று பிற்பகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

25 வயதான தாமஸ் கூம்ப்ஸ் என்ற நபர் கடந்த செவ்வாயன்று மவுண்ட் ஆல்பர்ட்டில் உள்ள Roy Clements Treeways இல் இறந்து கிடந்தார்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் சாண்ட்ரிங்ஹாம் பகுதியில் உள்ள Ti Kouka லேனில் தாங்கள் தேடும் நபர் கண்டுபிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் இன்று பிற்பகல் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

எங்களுக்குத் தகவல்களை வழங்கிய சமூக உறுப்பினர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்," என்று ஆக்லாந்து நகர CIB இன் டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் கிறிஸ் பாரி கூறினார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு திங்கட்கிழமை ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.