தெற்கு ஆக்லாந்தின் புறநகர்ப் பகுதியான Favona வில் நள்ளிரவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து நள்ளிரவு 12.15 மணியளவில் Donnell Ave வில் உள்ள ஒரு இடத்திற்கு பொலிசார் அழைக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் 3 பேர் காயம் அடைந்த நிலையில் ஒருவருக்கு தொடையில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மற்ற இருவருக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் கும்பலுடன் தொடர்புடையதாக பொலிஸார் கருதவில்லை.

இந்நிலையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.