அமெரிக்க அதிபர் ஜோ பைடனை எதிர்வரும் செவ்வாய்கிழமை வெள்ளை மாளிகையில் சந்திக்கவுள்ளதாக (நியூசிலாந்து நேரம் - புதன்கிழமை) பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் உறுதிப்படுத்தினார்.

வாஷிங்டனில் அதிபர் பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை சந்திக்கும் போது கலந்துரையாட பல விடயங்கள் இருக்கும் என்று பிரதமர் ஆர்டெர்ன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இதன்போது பசிபிக் பிராந்தியத்தின் போட்டித் தன்மை, வர்த்தகம் மற்றும் உக்ரைன் போர் ஆகியவை பற்றியும் விவாதிக்கப்படும் என்று பிரதமர் கூறினார்.