கடந்த திங்கட்கிழமை (23) கடுமையான காயங்களுக்கு உள்ளான ஒரு குழந்தை Ōtara வில் உள்ள Watford மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கவுன்டீஸ் மானுகாவ் சிஐபி டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் வாரிக் அட்கின் தெரிவித்தார்.

CPR வழங்கப்பட்ட போதிலும் துரதிர்ஷ்டவசமாக குழந்தை இறந்துவிட்டதாக  அறிவிக்கப்பட்டது.

குழந்தை இறந்த காரணத்தை கண்டறிய பொலிஸார் கொலை விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Randwick Park, Shifnal டிரைவ் பகுதியில் வசிப்பவர்களுடன் பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையினரின் எண்ணங்கள் குழந்தையின் குடும்பத்துடன் உள்ளன.

இந்த கடினமான நேரத்தில் குடும்பத்தினர் தனியுரிமையை கோரியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.