ஆக்லாந்தின் புறநகர்ப் பகுதியான Mount Albert இல் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் கொலை விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

மே 24 அன்று மாலை 6.45 மணியளவில் Roy Clements Treeway இற்கு அருகில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

மேலும் அந்த நபர் தாக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் நம்புகின்றனர்.

துப்பறியும் இன்ஸ்பெக்டர் கிறிஸ் பாரி, இன்று Mount Roskill காவல் நிலையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசுகையில்...

பொலிஸார் கொலை விசாரணையைத் தொடங்கியுள்ளதாக கூறினார்.

புலனாய்வுப் பிரிவினரின் பெரும் குழு விசாரணையில் ஈடுபட்டுள்ளதுடன், பொலிஸார் தொடர்ந்தும் அப்பகுதியில் பிரசன்னத்தை பேணி வருவதாகவும் அவர் கூறினார்.

முழு துப்பறியும் குழுவும் இந்த வழக்கில் பணியாற்றி வருவதாக அவர் சமூகத்திற்கு உறுதியளித்தார்.

தாக்குதல் இலக்கு வைக்கப்பட்டதா அல்லது தற்செயலானதா என்பதை இன்னும் உறுதிசெய்ய முடியவில்லை என அவர் தெரிவித்தார்.

சம்பவ தினத்தன்று பொதுமக்கள் மூலம் மாலை 6.55 மணியளவில் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி அல்லது டேஷ்கேம் காட்சிகள் உள்ளவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

காவல்துறையினர் இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாகக் கையாள்கின்றனர், மேலும் அந்த குற்றவாளி அல்லது குற்றவாளிகளை பொறுப்பேற்க வைப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

மே 24 செவ்வாய் அன்று பிற்பகல் முதல் இரவு 7 மணி வரை Treeway பகுதிக்கு அருகில் இருந்தவர்களிடம் இருந்து பொலிஸார் தகவல்களை முறையிடுகின்றனர்.