வங்காள விரிகுடாவின் தெற்மேற்குப் பகுதியில் உருவான தாழமுக்கம் தொடர்பாக சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

 

இதன்படி அடுத்த 24 மணித்தியாலங்களில்,இந்தத் தாழமுக்கம் புயலாக மாறலாம். வடமேற்குத் திசையில் நகர்ந்து, தீவிர புயலாக தமிழ் நாட்டை தாக்கலாம் என அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வடக்கு கிழக்கு கடல் சடுதியாக கொந்தளிக்கலாம். காற்றின் வேகம் திடீரென மணிக்கு 80 முதல் 100 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம்.

 

மேலும் ,புத்தளத்தில் இருந்து கொழும்பு ஊடாக மாத்தறை வரையிலான கரையோரத்திற்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.