சென்னை போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா நினைவு இல்லம் ஜனவரி 28ம் திகதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை போயஸ்கார்டனில் அரசுடைமையாக்கப்பட்ட ஜெயலலிதா நினைவு இல்லத்தை ஜனவரி 28ம் தேதி காலை 10.30 மணிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் திறந்து வைக்கிறார் முதல்வர் பழனிசாமி.

நினைவு இல்லம் திறக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 27ம் தேதி மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படும் நிலையில் மறுநாள் வேதா நிலையம் திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.