காரைத் திருடி அதை Whitianga வில் உள்ள ஒரு கடையை இரவோடு இரவாகத் தாக்கி கொள்ளையிட பயன்படுத்திய மூன்று பதின்ம வயது சிறுவர்கள் ஹமில்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருடப்பட்ட வாகனம் ஒரு வேலியில் மோதியை அடுத்து  ஹமில்டன் பொலிஸாரால் குறித்த சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர் என 
கிழக்கு வைகாடோ பகுதி கமாண்டர் இன்ஸ்பெக்டர் டீன் ஆண்டர்சன் தெரிவித்தார்.

அதிகாலை 4 மணிக்கு முன்னதாக, பஃபலோ பீச் ஆல்பர்ட் தெருவில் உள்ள ஒரு கடைக்குள் நுழைவதற்கு கார் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

Whitianga காவல்துறை அதிகாரிகள் வெற்றிகரமாக குறித்த சிறுவர்களை அடையாளம் கண்டு மாவட்டம் முழுவதும் எச்சரிக்கையை விடுத்த பின்னர், மூவரும் ஹமில்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்" என்று ஆண்டர்சன் கூறினார்.

இந்நிலையில் 13, 14 மற்றும் 15 வயதுடைய மூவரும், திருட்டு குற்றச்சாட்டில் செவ்வாய்க்கிழமை ஹமில்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

"இத்தகைய குற்றச்செயல்கள் எங்கள் சமூகங்களில் கவலையை ஏற்படுத்துவதாக காவல்துறை ஒப்புக்கொள்கிறது, மேலும் அது பொறுத்துக்கொள்ளப்படாது" என்று ஆண்டர்சன் கூறினார்.