ஆக்லாந்தின் மேற்கே பிஹா  கடற்கரையில் (Piha beach) இன்று காலை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலை 8.15 மணியளவில் Marine Parade வின் தெற்கே உள்ள கடற் பகுதியில் ஒருவர் நீரில் மூழ்கியதாக அவசர சேவைகளுக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை பொலிஸார் உறுதி செய்தனர்.

மரண விசாரணை அதிகாரி சார்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வார்கள் என செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.