இன்வர்கார்கிலில் நள்ளிரவில் ஒரு நபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதை அடுத்து கொலை விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

டான் ஸ்ட்ரீட்டில் (Don Street) உள்ள இன்வர்கார்கில் மாவட்ட நீதிமன்றத்திற்கு அருகில் இருவர் காயமடைந்ததாக நள்ளிரவு 12.45 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கத்திக்குத்து காயங்களுடன் ஒருவர் சுயநினைவின்றி காணப்பட்ட நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மற்றொரு நபரும் கத்திக்குத்து காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் இன்னும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டான் தெருவில் இன்றும் காட்சி விசாரணை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு டான் தெருவுக்கு அருகில் நடந்து சென்ற அல்லது வாகனம் ஓட்டிச் சென்ற எவருடனும் பொலிஸார் பேச விரும்புகிறார்கள்.

சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொண்டு கோப்பு எண்ணான P050337575ஐ மேற்கோள் காட்டி தகவல்களை வழங்கலாம்.