னது 2 மேன்முறையீட்டு வழக்குகளையும்‌ துரித விசாரணைக்குட்படுத்தவோ, பிணைபெற ஆவண செய்துதவுமாறும்‌ கோருகிறேன்‌. அது முடியாவிட்டால், அரசியல்‌ யாப்பில்‌ தங்களிற்குத்‌ தரப்பட்ட அதிகாரத்தைப்‌ பயன்படுத்தி, என்‌ தண்டனையை மரண தண்டனையாக தரமுயர்த்தி, ‘யுத்தக்‌ குற்றவாளி’ என என்னைப்‌ பிரகடனப்படுத்தி உடனடியாகவே பகிரங்கமாக என்னைத்‌ தூக்கிலிட உத்தரவிடுங்கள்‌. எனது ‌ இம்‌ முடிவு தொடர்பில்‌ யாரும்‌ என்னை ஆற்றுப்படுத்த முனைய வேண்டாம்‌. எனக்கு நீதி வேண்டும்‌ அல்லது மரணம்‌ வேண்டும்‌, அவ்வளவுதான்‌ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார் தமிழ் அரசியல் கைதியொருவர்.

 

கடந்த 12 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாசனே இந்த உருக்கமான கோரிக்கையை விடுத்துள்ளார்.

 

அவர் எழுதிய கடிதம் வருமாறு-