பங்களாதேஷூக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ள ஆப்கானிஸ்தான் வீரர்கள் 8 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒருவாரத்துக்குப் பிறகு ,அணியிலுள்ள மற்ற வீரர்கள் சில்ஹெட்டில் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்.

ஒருநாள் ஆட்டங்கள் பெப்ரவரி 23, 25 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது. டி20 தொடர் மார்ச் 3 மற்றும் மார்ச் 5 ஆகிய திகதிகளில் மிர்பூரில் நடைபெறவுள்ளது.