அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள ஒரு வணிக நிலையத்திற்குள் திடீரென புகுந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

துப்பாக்கி சூடு நடத்திய நபர் தப்பியோடி விட்டார்.அவர் தாக்குதல் நடத்தியதற்கான காரணம் பற்றி தெரியாத நிலையில் இதுபற்றிய விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.