உலக பணக்காரர்கள் வரிசையில் கடந்த 3 வாரங்கள் வரை முதல் 10 இடங்களில் இருந்தவர் முகேஷ் அம்பானி கடந்த சில வாரங்களாக இவரது ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் விலை சரிந்ததன் காரணத்தினால் உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் 10 இடங்களில் இருந்து பின் தள்ளப்பட்டுள்ளார். 

இருப்பினும் ஆசியாவிலும், இந்தியாவிலும் இவரே முதலிடத்தில் உள்ளார். 2007ஆம் ஆண்டு பங்குச் சந்தையில் முறைகேடான வர்த்தகத்தில் ஈடுபட்டமைக்காக இவரின் ரிலையன்ஸ் இன்டஷ்ரீஸ் நிறுவனத்திற்கு 25 கோடியும், முகேஷ் அம்பானிக்கு 15 கோடியும் அபராதம் விதிக்குமாறு இந்திய பங்குச்சந்தை ஓழுங்குமுறை வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய பங்குச்சந்தை ஒழுங்கு வாரியம் அறிவித்த இந்த அதிரடி உத்தரவினால் ஏனைய நிறுவனங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.