சீனாவில் பீஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி வரும் 4-ந் தேதி தொடங்குகிறது.

தாய்வான் விவகாரத்தில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

இது சீனாவில் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் எதிரொலிக்கும் என்று சீனா கருதுகிறது.

முன்னதாக சீனாவின் மனித உரிமை மீறல்களால் குளிர்கால ஒலிம்பிக்கிற்கு அதிகாரப்பூர்வ குழுவை அனுப்பப்போவதில்லை என்று அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கனிடம் பேசிய சீன வெளியுறவு மந்திரி வாங் யி, ‘‘பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டும். தாய்வான் விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். சீனாவுக்கு எதிராக வட்டம் போடுவதை நிறுத்துங்கள்’’ என்று எச்சரிக்கை விடுத்தார்.