நேப்பியரில் உள்ள Marine Parade கடலில் மூழ்கி குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

குறித்த விபத்தில் உயிரிழந்தது 5 வயது குழந்தை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்று பிற்பகல் 3.30 மணியளவில் நேப்பியரின் Marine Parade கடலில் ஒரு குழந்தை மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு காவல்துறை, ஆம்புலன்ஸ்கள், தீயணைப்புப் படை மற்றும் மீட்பு ஹெலிகாப்டர் ஆகியவை வருகைதந்தன.

நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் ஒரு நபரும் தண்ணீருக்குள் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில் குழந்தை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு அறிக்கையில், கிழக்கு மாவட்ட கமாண்டர் கண்காணிப்பாளர் ஜீனெட் பார்க், இது குழந்தையின் குடும்பத்திற்கு ஒரு பெரிய இழப்பு என்று தெரிவித்தார்.

கடற்கரைக்கான வருகை இந்த வழியில் முடிவடையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

என்ன நடந்தது என்பதை அறிய குழந்தையின் மரணம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொள்வார்கள் என பார்க் தெரிவித்தார்.