குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் இன்று (09) தனி விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது.

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் வெலிங்டன் இராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்டு, வெலிங்டன் இராணுவ மையத்தில் வைக்கப்படுகிறது.

அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தரைப்படை இராணுவ தளபதி நரவனே, விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்திரி, கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் ஆகியோர் தலைமையில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

பின்னர் முழு இராணுவ மரியாதையுடன் 13 பேரின் உடல்களும் சூலூர் விமானப்படை மையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அங்கிருந்து இராணுவ விமானம் மூலம் இன்று டெல்லி கொண்டு செல்லப்படுகிறது.

டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், மத்திய மந்திரிகள், அதிகாரிகள் தலைமையில் இறுதி மரியாதை செலுத்தப்படவிருக்கின்ற நிலையில் நாளையதினம் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

இந்த தகவலை இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.