தெற்கு ஆக்லாந்தில் நடந்த ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு, 40 வயதுடைய நபர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நேற்று இரவு 7 மணிக்குப் பின்னர் Otara முகவரியில் ஒரு நபர் துப்பாக்கி வைத்திருப்பதாகப் பொலிஸாருக்கு  புகாரளிக்கப்பட்டது.

இதனையடுத்து இரவு 10 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார்.

யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த நபர் இன்று மனுகாவ் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.