நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

காட்டேரி மலைப்பாதையில்  மேலே பறந்த போது கடும் பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி தீ பற்றி விபத்துக்குள்ளாகி உள்ளது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி  உட்பட 14 பேர் பயணித்து உள்ளனர்.

குறித்த விபத்தில், அதில் பயணித்த 4 இராணுவ வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

சில உடல்கள் விபத்துநடந்த பகுதியிலுள்ள மலைச்சரிவின் கீழே விழுந்துள்ள நிலையில் தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உடல்களை மீட்கவும்,அடையாளங்களை சரிபார்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பிபின் ராவத் பயணம் செய்ததை விமானப் படை அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளது.

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

பிபின் ராவத்தின் நிலை என்ன என்று தகவல் தெரியாத நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.