இன்று மாலை Tauranga துறைமுகத்தில் வாகனம் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாலை 5 மணியளவில் தண்ணீரில் ஒரு வாகனம் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து Chapel Street இற்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன, பிறகு 

ஒரு நபர் சம்பவ இடத்திலேயே இறந்தார், மற்றொருவருக்கு மருத்துவ ஊழியர்கள் சிகிச்சை அளித்தனர்.

பின்னர் சாலை மூடப்பட்டதுடன் சம்பவத்தின் சூழ்நிலைகள் குறித்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.