இலங்கை பிரஜையொருவரை பாக்கிஸ்தானின் சியால்கோட்டில் பெருமளவு மக்கள் அடித்துக்கொலை செய்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள பிரதமர் இம்ரான்கான் குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்

சியால்கோட்டில் தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் இலங்கையை சேர்ந்த மேலாளர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் காரணமாக இன்றைய நாள் பாக்கிஸ்தானிற்கு அவமானகரமான  நாளாக மாறியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நான் விசாரணைகளை மேற்பார்வை செய்துவருகின்றேன் கைதுகள் இடம்பெறுகின்றன காரணமானவர்கள் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் இது குறித்து எந்த சந்தேகமும் வேண்டாம் என இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.