சமையல் எரிவாயு விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண எரிவாயு விநியோகஸ்தர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், தமது செயற்பாடுகள் வழமை போன்று தொடரும் என லாஃப் எரிவாயு நிறுவனம் தெரிவித் துள்ளது.

அவ்வாறான உத்தியோகபூர்வ உத்தரவு எதுவும் இதுவரை தமக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும், இதனால் எரிவாயு விநியோகம் மற்றும் விற்பனை இடைநிறுத்தப்பட மாட்டாது எனவும் லாஃப் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச். வேகபிட்டிய குறிப்பிட்டார்.

இதேவேளை, நேற்று (02) முதல் நாடளாவிய ரீதியில் எல்பி எரிவாயு விநியோகத்தை லிட்ரோ எரிவாயு தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.