ஸஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்த நபர் ஒருவர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் கண்டி பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் ஹிகுல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான நபர் ஒருவரே இவ்வாறு நேற்று (2) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட அடிப்படைவாத விரிவுரைகள் அடங்கிய முகாமில் அவர் கலந்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.