வீட்டின் மேல் மாடியில் இருந்து வந்த துப்பாக்கி தோட்டாக்கள் துளைக்கப்பட்டு கேரள மாணவி கொல்லப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில்  கேரளாவை சேர்ந்த 19 வயது மாணவியான மரியம் சூசன் என்ற பெண்ணே இவ்வாறு சுட்டுகொல்லப்பட்டுள்ளார்.

மரியம் சூசன் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவேளை வீட்டின் மேல் மாடியில் இருந்து  துப்பாக்கி தோட்டாக்கள்  வந்து உள்ளது. தோட்டாக்கள்  அவர் மீது பாய்ந்து  மரணமடைந்து உள்ளார்.அவர் மீது தாக்குதல் நடத்தியவர் சூசன்  வீட்டின் மேல்மாடியில்   வசிப்பவர் என கூறப்படுகிறது

மாண்ட்கோமரி காவல் துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து  விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த மரியம் சூசன் மேத்யூ கேரளா பத்தனம்திட்டாவில் உள்ள நிராணம் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இவர்களது குடும்பம் 4 மாதஙக்ளுக்கு முன்புதான் அமெரிக்கா வந்துள்ளது.இதற்கு முன் அவர்கள் மஸ்கட்டில்  வசித்து உள்ளனர். சூசன் உயர் பள்ளிகல்வியை இந்தியாவில் முடித்து உள்ளார்.