கட்டுப்படுத்த முடியாத நிலையிலுள்ளது என பிரித்தானியா வர்ணித்துள்ள வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் தொற்று, இத்தாலிக்கும் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ் வார ஆரம்பத்தில் பிரித்தானியாவிலிருந்து ரோம் நகரிலுள்ள பியூமிசினோ(Fiumicino) விமான நிலையத்திற்கு திரும்பிய 2 பேரில் ஒரு நபருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாக இத்தாலி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவர் தனிமைப்படுத்தப்பட்டு அவரது உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோமிலுள்ள சீலோராணுவ வைத்தியசாலை ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் புதிய வீரியமிக்க கொரோனா வைரசின் மரபியல் வடிவம் உறுதி செய்யப்பட்டது.