இன்று சமூகத்தில் 102 கொவிட் தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில்,சமூக தொற்றாளர்களின் எண்ணிக்கை முதன்முறையாக மூன்று மடங்காக பதிவாகியுள்ளது.

இவற்றில் 94 வழக்குகள் ஆக்லாந்திலும் 8 வழக்குகள் வைகாடோவிலும் இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வைகாடோ வழக்குகள் அனைத்தும் Te Awamutu பகுதியில் இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இன்றைய ஊடக சந்திப்பில் பொது சுகாதார இயக்குநர் டாக்டர் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் ஹாக்ஸ் பேவில் நேர்மறையான வழக்குகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

Te Awamutu வில் உள்ள மக்கள் தங்களுக்கோ அல்லது அவர்களது வீட்டில் உள்ளவர்களுக்கோ தொற்று அறிகுறிகள் இருந்தால் அல்லது அவர்கள் வேலைக்காக அல்லது பிற செயல்பாடுகளுக்காக கடந்த வாரத்தில் Te Awamutu வில் இருந்து பயணம் செய்திருந்தால் கொவிட் சோமனை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் ஏழு பேர் உட்பட 46 பேர் மருத்துவமனையில் உள்ளனர்.

மேலும் தற்போதைய சமூக தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 2260ஆகும் மற்றும் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து நியுசிலாந்தில் உறுதிபடுத்தப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 4956 ஆகும்.