நியூசிலாந்தில் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை நேற்றைய உச்சத்திலிருந்து குறைந்துள்ளது. இந்நிலையில் இன்று 60 சமூக கொவிட் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

அவற்றில் 56 பேர் ஆக்லாந்திலும், நான்கு பேர் வைகாடோவிலும் இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று அமைச்சகம் 94 புதிய சமூக வழக்குகளைப் பதிவு செய்தது, இது தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அதிகமாக பதிவாகிய எண்ணிக்கையாகும்.

தீவிர சிகிச்சை பிரிவில் 5 பேர் உட்பட 43 பேர் மருத்துவமனையில் உள்ளனர்.

இந்நிலையில் சமூகத்தில் உறுதிபடுத்தபட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 2158 ஆகும்.மற்றும் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து நாட்டில் உறுதிபடுத்தபட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 4854 ஆக அஅதிகரித்துள்ளது.

தொற்றுநோய்கள் இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவே நியூசிலாந்தைச் சேர்ந்தவர்களை வைரஸ் பரிசோதனை செய்யுமாறு சுகாதார இயக்குநர் டாக்டர் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட்  ஊக்குவித்தார்.

வைகடோவில் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை இப்போது 56 ஆக உள்ளது, அவர்களில் 10 பேர் இப்போது குணமடைந்துள்ளனர்.

இதனிடையே நேற்றையதினம் 42,809 தடுப்பூசி அளவுகள் வழங்கப்பட்டன அவற்றில் 10,392 முதல் அளவுகள் மற்றும் 32,417 இரண்டாவது அளவுகள் ஆகும்.