இன்று காலை Whakatane அருகே Nukuhou இல் மாநில நெடுஞ்சாலை 2 இல் லாரி மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலை 9.35 மணியளவில் மோட்டார் சைக்கிளும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் உறுதி செய்தனர்.

இந்நிலையில் விபத்துக்கான சூழ்நிலைகள் குறித்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.