இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் மரணித்ததையடுத்து 31 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாங்கடோட்டோவைச் சேர்ந்த 19 வயதான மிஷினா தலாஃபு பெடெலோ என்ற நபர் சனிக்கிழமை இரவு மங்கெரேவில் உள்ள மாஸ்ஸி சாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து மிடில்மோர் மருத்துவமனையில் இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட நபர் நாளை மனுகாவ் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என கவுண்டியின் மனுகாவ் சிஐபியின் துப்பறியும் மூத்த சார்ஜென்ட் கெவின் டைர்னன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் போலீஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.