கடந்த வாரம் Omapere வில் ஹோகியாங்கா குடியிருப்பில் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட  நபர் Ngawha சிறையில் உயிரிழந்தார்.

குறித்த நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, நார்த்லேண்ட் பிராந்திய சிறைச்சாலைக்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

உயிரிழந்தவரின் மரணம் குறித்து விசாரணைகள் தொடர்கின்றன.

அந்த நபர் வார இறுதியில் நீதிமன்றத்தில் ஆஜரானதையடுத்து எதிர்வரும் அக்டோபர் 28 ஆம் திகதி வாங்கேரி உயர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.

துப்பறியும் ஆய்வாளர் ரைஸ் ஜான்ஸ்டன் அவர்கள் இனி குறித்த வழக்கைத் தொடர மாட்டார்கள் என்று கூறினார்.

கடந்த வாரம் ஆமாபெரேவைச் சேர்ந்த கீத் ஸ்டூவர்ட் கிளார்க் என்ற 73 வயதான நபரை கொலை செய்ததாக குறித்த நபர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இரண்டு மரணங்களும் பிரேத பரிசோதகருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஜான்ஸ்டன் தெரிவித்தார்.