ஷ்யா தனது விண்வெளி வீரர்களுக்கும், விண்வெளித்துறை பணியாளர்களுக்கும் கொரோனாத் தொற்றுக்கான  தடுப்பூசி செலுத்தும் பணியை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மாஸ்கோவிற்கு அருகேயுள்ள ஸ்டார் சிட்டி என்ற இடத்தில் ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு அமைப்பான ரோஸ்காஸ்மோஸ் உள்ளது.

அங்கு வைத்து விண்வெளி வீரர்களான நிகோலாய் சுப், ஓலெக் ஆர்டிமையவ் ஆகியோருக்கு முதலாவதாக ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இவர்களில் ஓலெக் ஆர்டிமையவ் ஏற்கனவே சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று வந்துள்ளார்.

இதனிடையே இந்த தடுப்பூசியை இதுவரை செலுத்திக்  கொள்ளாத அந் நாட்டு  ஜனாதிபதி விலாடிமிர் புட்டின் (Vladimir Putin) விரைவில் அதை செலுத்திக் கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.