நியூசிலாந்தில் இன்று 55 சமூக தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட புள்ளிவிவரங்கள்படி 53பேர் ஆக்லாந்திலும், இரண்டு பேர் வைகாடோவிலும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தீவிரசிகிச்சை பிரிவில் ஆறு பேர் உட்பட 32 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்றைய அரசாங்க மாநாட்டில் பேசிய சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட், இன்று வைகடோவில் அடையாளம் காணப்பட்ட இரண்டு புதிய சமூக தொற்றாளர்களும் ஹாமில்டனில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்தார்.

வைகாட்டோவில் தடுப்பூசி விகிதம் நேற்று அதிகமாக இருந்ததாகவும், 7434 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.