சமூகத்தில் இன்று 43 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி அவற்றில் 40பேர் ஆக்லாந்திலும், மூன்று பேர் வைகாடோவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தீவிரசிகிச்சை பிரிவில் ஐந்து பேர் உட்பட 34 பேர் மருத்துவமனையில் உள்ளனர்.

இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் மொத்தமாக 16,565 கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் நேற்றையதினம் கொவிட் தடுப்பூசியின் 15,107 முதல் அளவும் 54,011 இரண்டாவது அளவும் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.