அமெரிக்காவின் அட்லாண்டாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகரில் சாம்பிலீ கவுன்டி பகுதியில் உள்ள தெகால்ப்-பீச்ட்ரீ விமான நிலையத்தில் இருந்து செஸ்னா 210 ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது.

அந்த விமானத்தில் விமானி உள்பட 4 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திடீரென தீப்பிடித்து உள்ளது.

இதில், விமானத்தில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் பற்றி இதுவரை தெரிய வரவில்லை.

இதனை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த 15 தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்து பற்றி தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.