கடலாடி அருகே மீனங்குடி கிராமத்தை சேர்ந்த முகேஷ் என்ற 7 வயது சிறுவன் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் கடலாடியில் உள்ள தன்னுடைய மாமா வீட்டுக்கு சென்றிருந்தார்.

அவ்வேளை கட்டுமானத்திற்காக தொட்டியில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்துள்ளனர். சிறுவன் முகேஷ் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சார மோட்டாரில் தொட்டவுடன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். 

குறித்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்த கடலாடி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு முகேஷின் சடலம் அனுப்பி வைக்கப்பட்டதுடன் சம்பவம் குறித்து கடலாடி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.