இலங்கையில் நடைபெறவிருக்கும் உலகத்தமிழர் கலை மற்றும் பண்பாட்டு பேரவையின் முதலாவது சர்வதேச மாநாடு தொடர்பில் அந்தப் பேரவையின் அனைத்துலக தலைவர்களும் கலந்து கொள்ளும் முதலாவது நிகழ்நிலை சந்திப்பு எதிர்வரும் அக்டோபர் 10 ஆம் திகதி இலங்கை நேரப்படி மாலை 5 மணிக்கு நடைபெறவிருக்கிறது.
உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டு பேரவையின் தலைவர் பொருளியலாளர் திரு. தங்கதுரை மகிபாதேவன் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தில் அதன் சர்வதேச செயலாளர் நாயகம் பேராசிரியர் உலகநாயகி பழனி அம்மையாரும் பங்கேற்க உள்ளார்.
மேலும் உலகத்தமிழர் கலை மற்றும் பண்பாட்டு பேரவையின் சர்வதேச ஆலோசகர் சட்டத்தரணி, கவிஞர் காந்தி கண்ணதாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
இந்நிலையில் குறித்த கூட்டத்தில் தமிழர் பாரம்பரியத்தில் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ள முடியும்.
இணைய விரும்புபவர்கள் கீழே தரப்பட்டுள்ள லிங்க் ஊடாக இணைந்து கொள்ளலாம்.
Topic: தமிழர் தம் பாரம்பரிய கலையும் கலாச்சாரமும் - ITAACC
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/81345370751
Meeting ID: 813 4537 0751